தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறுகதைப் போட்டிக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் குவிந்தன. பல கட்டங்களாக நடைபெற்ற பரிசீலனைகளின் முடிவில் 37 சிறுகதைகள் இறுதிக் கட்டத்தை எட்டின. நடுவர் குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்கள் சிவசங்கரி, மாலன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் பரிசீலனை செய்து, பரிசுக்குரிய சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு ரூ.50,000 பெறும் சிறுகதை:
கானல் நீர் காட்சிகள் - ந.சோலையப்பன்
இரண்டாம் பரிசு ரூ.25,000 பெறும் சிறுகதை:
அது ஒரு நோன்புக்காலம் - சித்திக்
மூன்றாம் பரிசு ரூ.15,000 பெறும் சிறுகதை:
மாசு - மாலதி சந்திரசேகரன்
ஆறுதல் பரிசு தலா ரூ.1,000 பெறும் 10 சிறுகதைகள்
1. பெட்டை - சரவண கார்த்திகேயன்
2. கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம் - ஆதலையூர் சூரியகுமார்
3. வாடாமலர் மங்கை - தேனம்மை லெக்ஷ்மணன்
4. இன்னுமொரு அம்மா - எஸ்.ஸார்.சி.
5. காட்சிப் பிழைகள் - ஐஷ்வர்யன்
6. தளை - பி.ரங்கநாயகி
7. காணாமல் போகாதவர் - கொற்றவன்
8. மனிதனும் மனிதனும் - காரை ஆடலரசன்
9. பாதரச பந்தங்கள் - வே.சரஸ்வதி உமேஷ்
10. மழை நின்ற காலத்தில் - என்.நித்யா.
பரிசு எப்போது?: பரிசு வழங்கும் நிகழ்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.