பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்: பரிசுகளை வழங்கி பாராட்டினார் காவல் ஆணையர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பொதுமக்களுக்கும், போலீஸார் குடும்பத்துக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னைப்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பொதுமக்களுக்கும், போலீஸார் குடும்பத்துக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் கபடி, ஓட்டப் பந்தயம், வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவு நாளான திங்கள்கிழமை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனிடையே சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பாலமந்திர் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆணையர் பொங்கல் விழா கொண்டாடினார். குழந்தைகளுக்கு கரும்பு, இனிப்பு ஆகியன வழங்கி மகிழ்ந்தார். பின்னஹர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com