மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கர்ப்பிணி சாவு

சென்னை மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

சென்னை மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.
 பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி ஜாஸ்மின் (25), மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒரு தனியார் உணவக ஊழியர். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ஜாஸ்மின், சனிக்கிழமை பணிமுடிந்த பின், வீட்டுக்குப் புறப்பட்டார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி.சாலையில் மறுபக்கம் செல்ல முயன்றபோது கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வினோத் (29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜாஸ்மின் மீது இடித்தது. இதில் ஜாஸ்மின் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
 பல்லாவரத்தைச் சேர்ந்த நாகராஜன் (49) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள், சாலையில் விழுந்து கிடந்த ஜாஸ்மின் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஜாஸ்மின், சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார். இந்த விபத்தில் காயமடைந்த நாகராஜன், அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இது குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வினோத்தை உடனடியாகக் கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com