சென்னை மெரீனா காமராஜர் சாலையில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவைச் சேர்ந்தவர் டி.ராமானுஜம் (75). இவர் மெரீனா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் ராமானுஜம், வியாழக்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்காக மெரீனா கடற்கரை பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு வாயில் அருகே சாலையின் குறுக்கே நடந்து சென்றார். அப்போது அங்கு வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமானுஜம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரின் ஓட்டுநர் சிந்தனைசெல்வனை (29) கைது செய்தனர்.