சென்னையில் 15 பகுதி அலுவலகங்களில் நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 10) வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 10) வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான திறந்த வெளிக் கூட்டம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த திறந்த வெளிக்கூட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
எனவே இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com