நகைக் கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது

சென்னை, திருமங்கலத்தில் நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் பிடித்தனர்.

சென்னை, திருமங்கலத்தில் நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருமங்கலம் நேரு நகரில் ஏ.கே.எஸ். என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. 3 தளங்களுடன் கூடிய இந்த நகைக் கடையில் கடந்த 6-ஆம் தேதி ஒரு கும்பல் நுழைந்து, 10 கிலோ தங்கம், ரூ. 5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
கொள்ளையர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொடுங்கையூரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com