வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என தொமுச அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வரும் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொமுச பேரவைத் தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தொமுச பொருளாளர் கி.நடராஜன் தெரிவித்துள்ளார்.