லஷ்மண் ஸ்ருதி இசைக் குழுவில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்கும் 'எஸ்.பி.பி கிளாசிக்ஸ்' என்னும் பிரமாண்ட மெல்லிசை நிகழ்ச்சி சென்னையில் வரும் 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து லஷ்மண் ஸ்ருதி இசைக்குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) மாலை 6.05 மணிக்கு தொடங்கவுள்ள எஸ்.பி.பி. மெல்லிசை நிகழ்ச்சியில் ஒலிப்பதிவுக் கூடங்களில் உபயோகிக்கப்பட்ட இயற்கையான வாத்தியக் கருவிகளைக் கொண்டு, கலைஞர்கள் நேரடியாக மேடையில் இசைக்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை நேரடியாக வடபழநி லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் மற்றும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் குறித்த விபரங்களுக்கு 98409-25450 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் bookmyshow.com, eventjini.com, lakshmansruthi.com ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.