போலீஸார் துரத்தியபோது மாடியிலிருந்து குதித்த ரெளடி சாவு

போலீஸார் துரத்தியதை அடுத்து மாடியிலிருந்து குதித்த ரெளடி மோகன்ராஜ் (23) உயிரிழந்தார்.

போலீஸார் துரத்தியதை அடுத்து மாடியிலிருந்து குதித்த ரெளடி மோகன்ராஜ் (23) உயிரிழந்தார்.
வடசென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் மோகன்ராஜ், ராசையா. பிணையில் வெளிவந்த இவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இருவரும் புதன்கிழமை திருவொற்றியூர் கிராமத் தெரு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் பதுங்கி இருப்பது குறித்து ரகசியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.
அதையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையிலான சிறப்பு படையினர் அப்பகுதியில் ரெளடிகளை தேடும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ரவுடிகள் இருவரும் போலீஸாருக்குப் பயந்து அடுக்கு மாடி குடியிருப்பின் மேல் தளத்துக்கு ஓடினர். அங்கும் போலீஸார் துரத்திச் சென்ற நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியிலிருந்து இருவரும் குதித்துள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் ரெளடி மோகன்ராஜ் (23) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு ரெளடி ராசையா (24) கை, கால்கள் முறிந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com