பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுல தொண்டு நிறுவன மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் சிவானந்த குருகுல தொண்டு நிறுவனத்தில் தேர்வெழுதிய 19 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பாராட்டினர்.