ராயபுரம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை, ராயபுரம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, புறநகர் ரயில் சேவையில் வியாழக்கிழமை (மே 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ராயபுரம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, புறநகர் ரயில் சேவையில் வியாழக்கிழமை (மே 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பகுதி ரத்து: 
1. வேளச்சேரி-ஆவடிக்கு காலை 10.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். 
2. வேளச்சேரி-திருத்தணிக்கு முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். 
மாற்றுப் பாதையில் இயக்கம்:
1. அரக்கோணம்-வேளச்சேரிக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் ரயில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வழியாக மாற்றி விடப்பட்டு, வேளச்சேரியை அடையும்.
2. கும்மிடிப்பூண்டி- வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வழியாக மாற்றி விடப்பட்டு, வேளச்சேரியை அடையும்.
பயணிகள் சிறப்பு ரயில்:
1. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்- ஆவடிக்கு காலை 11.15 மணிக்கு பயணிகள் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.
2. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - திருத்தணிக்கு நண்பகல் 12.15 மணிக்கு பயணிகள் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
புறப்படும் நேரத்தில் மாற்றம்:
சென்னை கடற்கரை-ஆவடிக்கு காலை 10.30 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, 
முன்னதாகவே காலை 9.45 மணிக்கு புறப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com