சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கஜா புயல் காரணமாக நவ. 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.15-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கஜா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நவ. 27-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62. ராஜாஜி சாலை, சென்னை -600 001 என்ற முகவரியில் நடைபெறும்.