மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

சென்னை, வேளச்சேரி, மயிலாப்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான வரை நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை, வேளச்சேரி, மயிலாப்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான வரை நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 வேளச்சேரி: வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சத்தியப்பிரியா, தெற்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 45 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
 மயிலாப்பூர்: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் கடந்த 7-ஆம் தேதி திருவண்ணாமலைக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினார்.
 அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 10 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
 அம்பத்தூர்: அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜா சந்திரசேகர். இவர் திங்கள்கிழமை வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணம், 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
 நகைகள், பணம், வெள்ளிப் பொருள்கள் திருட்டுபோனது தொடர்பாக வேளச்சேரி, மயிலாப்பூர், அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com