சென்னை வேளச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் அமர் அகர்வால் தெரிவித்தார்.
மருத்துவமனையை நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை திறந்து வைத்தார். மருத்துவமனைகளின் தலைவர் அமர் அகர்வால், செல்லிடப்பேசி, கணினியை அதிகம் பயன்படுத்துவதால் கண் பிரச்னை ஏற்படுகிறது. இதில், குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதைத் தடுக்க கணினி, செல்லிடப்பேசியில் தொடர்ந்து அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வேளச்சேரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் வகையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 100 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றார்.
இந்த விழாவில், கண் தானம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர் அஷார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.