இன்று தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) அரசு விடுமுறை என்பதாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாலும் சென்னை


மீலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) அரசு விடுமுறை என்பதாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாலும் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது என ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ.21) அரசு விடுமுறை என்றாலும், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதால், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com