ஐ.சி.எப்.பில் விபத்து: தொழிலாளி சாவு

சென்னை ஐ.சி.எப்.பில் ஏற்பட்ட விபத்தில், தொழிலாளி இறந்தார்.


சென்னை ஐ.சி.எப்.பில் ஏற்பட்ட விபத்தில், தொழிலாளி இறந்தார்.
ஆவடி லாசர் நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ப.ஷாஜிபால் (45). இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஐ.சி.எப். மெக்கானிக்கல் பிரிவில் டெக்னிஷியனாக வேலை செய்து வந்தார். 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பணிமனையில் அவர் கிரேனில் ஏறி செல்லும்போது, திடீரென 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். 
இதில் பலத்த காயமடைந்த ஷாஜிபால் மீட்கப்பட்டு ஐ.சி.எப். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷாஜிபால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.எப். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com