தமிழகத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை 100 சதவீதம் கணினிமயமாக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட பணியாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை 100 சதவீதம் கணினிமயமாக்க வேண்டும், சரியான எடை அளவில் பொருள்களை வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் மூட்டைகளை சரி பார்க்க சரியான எடை இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.