ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் புதிதாக இந்திய அரசியல் கல்வி மையம் தொடங்கப்பட உள்ளதாக அதன் இயக்குநர் மதன்மோகன்கோயல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மத்திய அரசின் இளைஞர் நலத்துறையின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் இயக்குநராக பேராசிரியர் மதன்மோகன்கோயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து புதிய இயக்குநர் மதன்மோகன்கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கூறியதாவது:
இந்நிறுவனத்தில் புதிதாக இந்திய அரசியல் மையம் தொடங்கப்பட்டு இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும், ஊடகம் மற்றும் பத்திரிகைகள் மூலமாக இளைஞர்களை நல்வழிப்படுத்தி, அமைதியான பாரதத்தை உருவாக்கவும், வளர்ச்சியை நிலைநாட்டவும், ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்படும் என்றார்.