எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் புதன்கிழமை பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கைஆழ்வார் தெரு வழியாக தேரடி பகுதியில் முடிவடைந்தது. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.