மதுராந்தகத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம் ஜே.ஜே. அறக்கட்டளையின் 5-ஆம் ஆண்டை முன்னிட்டு இந்திய சுதந்திர தின விழா, மதநல்லிணக்க விழா மற்றும் அரசின் 10, பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,

மதுராந்தகம் ஜே.ஜே. அறக்கட்டளையின் 5-ஆம் ஆண்டை முன்னிட்டு இந்திய சுதந்திர தின விழா, மதநல்லிணக்க விழா மற்றும் அரசின் 10, பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜேஜே அறக்கட்டளை நிறுவனர் டி.ஜெர்லின் ஜோன்ஸ் வரவேற்றார். மேல்மருவத்தூர் ரயில் நிலைய அலுவலர் எஸ்.ஜாபர் மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள பள்ளி பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பரிசுளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், செட்டியார் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், தமிழ்விரும்பி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை செயலர் ஜே.ஞானசாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com