ரத்த தான முகாம்

சுதந்திர தினத்தையொட்டி, மதுராந்தகம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி, மதுராந்தகம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவர் இ.கே.தினகரன் தலைமை வகித்தார். முகாமை மண்டல தலைவர் எம்.வரதராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க விரிவாக்கத் தலைவர் கே.அய்யனாரப்பன், மாவட்டத் தலைவர் ராஜசேகர், சங்க நிர்வாகிகள் பொன். பூபாலன், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட பெருமாள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 34 பேர் ரத்த தானம் செய்தனர். செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com