கல்பாக்கம், புதுப்பட்டினம் வாயலூரை அடுத்த காரைத்திட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்பாக்கம், புதுப்பட்டினம் வாயலூர் ஊராட்சியில் அடங்கிய காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டது. வட்டார வளர்கல்வி மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, முன்னாள் வாயலூர் ஊராட்சித் தலைவர் கிங் உசேன் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினார்.