திறன் வளர்ச்சிப் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறன் வளர்ச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பா.பொன்னையா பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
திறன் வளர்ச்சி வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் பா.பொன்னையா.
திறன் வளர்ச்சி வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் பா.பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறன் வளர்ச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பா.பொன்னையா பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஜூலை 10 முதல் 15 வரை திறன் வளர்ச்சி நாள் வாரமாகக் கொண்டாடப்பட்டது. இந்த வார விழாவின் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடையே திறன் வளர்ச்சி குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com