கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கான உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது

திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கான உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தலா ரூ.7,000 வீதம் ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் புரவலர் கமலா பாலசந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் குகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் ரேணுகாம்பாள்
நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com