சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருது அளிப்பு

மேல்மருவத்தூர் சின்ரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளை சார்பில், 6-ஆம் ஆண்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் சின்ரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளை சார்பில், 6-ஆம் ஆண்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் சின்ரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், மேல்மருவத்தூரை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள், அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பற்ற மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளர் த.ரமேஷ் வரவேற்றார். கராத்தே வீரர் ஷிகான் ஹூசைனி பங்கேற்று சாதனையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்ரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளை மேலாண்மை நிர்வாகி பி.ஸ்ரீதேவி ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com