ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ராஜீவ் காந்தி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ராஜீவ் காந்தி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குருவிமலை கிராம கமிட்டி தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.
வட்டாரத் தலைவர் அவளூர் ஜி.சீனுவாசன் ராஜீவ் காந்தி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் லோகநாதன், வட்டார பொதுச்செயலாளர் பாலாஜி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல், அன்னை இந்திரா பேரவை சார்பில் சாலவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் சாலவாக்கம் உசேன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி, நிர்வாகிகள் சீனிவாசன், முரளி, நஜீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அனைவரும் தீவிரவாத ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com