கந்து வட்டி புகாரில் ஒருவர் கைது

சுங்குவார்சத்திரத்தில் கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் கைதானார்.

சுங்குவார்சத்திரத்தில் கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் கைதானார்.
 மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜுவிடம் (46) ரூ. 10 லட்சம் கடன் வாங்கினாராம். இதற்கான வட்டியும், அசலும் செலுத்த முடியாத நிலையில், தனக்குச் சொந்தமான 4 சென்ட் வீட்டுமனையை ராஜுவுக்கு லோகநாதன் எழுதிக் கொடுத்துள்ளார்.
 லோகநாதன் மீண்டும் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வட்டியும், அசலும் செலுத்திய பிறகும் இன்னும் ரூ. 20 ஆயிரம் தர வேண்டும் என லோகநாதனை ராஜு மிரட்டியதாகத் தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் ராஜு கைது செய்யப்பட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com