பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
குருகுலம் அரசுப் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் சிவகுமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர்கள் எம்.முனுசாமி, பவித்ரா சீனிவாசன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணைச் செயலாளர் மதியழகன், பள்ளித் தலைமை ஆசிரியை அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சங்கப் பொருளாளர் வா.தங்கராஜ் நன்றி கூறினார்.
இதேபோல ஜமீன் எண்டத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு நகர அரிமா சங்கத் தலைவர் இ.கே.தினகரன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் மதியழகன், மண்டலத் தலைவர் வரதராஜன், நிர்வாகிகள் மணோகர், யுவராஜ், தாஜூதீன், தலைமை ஆசிரியர் இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.
தொடர்ந்து பெருவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒழவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மருவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.