செங்கல்பட்டு கிளைச் சிறைச் சாலையில் திங்கள்கிழமை காந்தி ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், கிளைச் சிறைச் சாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து விசாரணைக் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரி ஆர்.குணசேகர் இனிப்பு வழங்கினார்.
மேலும், கைதிகளுக்கு மதிய உணவாக சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.