அக்.12-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 12-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரத்தில் வரும் 12-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், எரிவாயு முகவர்களிடம் பதிவு செய்த குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பான குறை தீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. 
இந்த குறைபாடுகளை களைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைக்கு உள்பட்டு, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 12-ஆம் தேதி காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com