தூய்மை இந்தியா குறும்பட போட்டியில் படப்பை ஊராட்சி முதல் பரிசை பெற்றுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி ஆகியவை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டு, வரப்பெற்ற கட்டுரை மற்றும் குறும்படங்களிலிருந்து, மாவட்ட அளவில் சிறந்த மூன்று கட்டுரை, குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, கட்டுரைப்போட்டியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டி புண்ணியத்தைச் சேர்ந்த ஆர்.வளர்மதிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
அதுபோல், குறும்படப் போட்டியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், படப்பை ஊராட்சியை சார்ந்த பி.விஷ்ணுகணபதிக்கு முதல்பரிசும், வரதராஜபுரம் ஊராட்சியைச் சார்ந்த எஸ்.கிருஷ்ணனுக்கு இரண்டாம் பரிசும், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம், திருப்புலிவனம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.முருகனுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.