தேமுதிக சார்பில் முப்பெரும் விழா

தேமுதிமுக சார்பில் கட்சியின் 13-வது ஆண்டு தொடக்க விழா, கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, நல உதவி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தேமுதிக சார்பில் முப்பெரும் விழா

தேமுதிமுக சார்பில் கட்சியின் 13-வது ஆண்டு தொடக்க விழா, கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, நல உதவி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் செங்கல்பட்டு நகர செயலாளர் சி.எம்.ஏ.ரவி தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் கே.நாகராஜன், பொருளாளர் சி.எம்.எஸ்.பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். நகர துணைச் செயலாளர்கள் வி.தேவராஜன், எஸ்.ஏ.எஸ். அலாவுதீன், எம்.சஞ்ஜய்குமார், எம்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ டி.முருகேசன் ஆகியோர் தையல் இயந்திரம், வேட்டி சேலைகள், சலவைப் பெட்டி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். 
பொதுக்குழு உறுப்பினர்கள் கே.நித்யானந்தம், ஜே.ஏழுமலை, காட்டாங் கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ஏ.எத்திராஜ், தொழிலாளர் கழக நிர்வாகிகள் என்.லோகநாதன், ஆர்.சுந்தர் மற்றும் ஏ.எஸ்.கறீம், கட்சிப் பேச்சாளர்கள் பி.தம்பிதுரை, எஸ்.முகிலரசன், செல்வதாஸ், கே.என்.பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நகர 33-ஆவது வார்டு நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com