காஞ்சிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (61) . ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர், கடந்த 2 வாரங்களாக மர்மக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் காய்ச்சல், சளித்தொல்லையால் அவதிக்குள்ளாகி வந்த, நடராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.