மர்மக் காய்ச்சல்: ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சாவு

காஞ்சிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மர்மக் காய்ச்சல்: ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சாவு

காஞ்சிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (61) . ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர், கடந்த 2 வாரங்களாக மர்மக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
தொடர் காய்ச்சல், சளித்தொல்லையால் அவதிக்குள்ளாகி வந்த, நடராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com