செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கம் அருகே தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை ரயிலில் அடிபட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சின்னையன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் சின்னையன் கூறுகையில், இறந்தவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர். தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இவர் கட்டம் போட்ட வெள்ளை டிசர்ட்டும், முக்கால் கால் பேண்ட்டும் அணிந்திருந்தார். மாநிறமாக உள்ளார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.