செங்கல்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, நெம்மேலி மகிரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷாசதாசிவன் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளர் பழனி, நிலைய அலுவலர் வள்ளியரசி, நிலைய உதவி அலுவலர் தீனதயாளன், நோய் தடுப்புப் பிரிவு தலைவர் தமிழ்மணி ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து விளக்கினர்.