செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தகம் படிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி.என்.குகானந்தம் பேரணியை தொடங்கி வைத்துப் பேசினார்.
வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.தனஞ்செழியன், இணைச் செயலாளர் எம்.குமார், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அசோகன், மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஏ.எச். அல்லி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் பார்வைக்கு திருக்குறள் திட்டத்தை திருப்போரூர் அரிமா சங்கத் தலைவர் எஸ்.சுந்தரேசன் தொடங்கி வைத்தார்.
முதுகலை ஆசிரியர் ஆர். சிவக்குமார் விளக்கவுரையாற்றினார். நூலகர் சி.ரேவதி வரவேற்றார். திருப்போரூர் காவல் ஆய்வாளர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பாரத வித்யாலயா மெட்ரிக். பள்ளித் தாளாளர் கே.பாலசுப்பிரமணியன், பி.கே.எம். பள்ளித் தாளாளர் ஆர்.எம்.ஜெகன் நாதன், ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக். பள்ளித் தாளாளர் மலர்விழி நடேசன், எவர்கிரீன் மெட்ரிக். பள்ளித் தாளாளர் ஆர்.ரெங்கநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பள்ளி மாணவ, மாணவிகள் முக்கியவீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர். பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட மைய நூலக அலுவலர் மந்திரம் முடித்து வைத்தார்.