காஞ்சிபுரத்தில் இடியுடன் கனமழை

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. 

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. 
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை, பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை 4.50-க்கு தொடங்கிய மழை, தொடர்ந்து இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் வரை பெய்தது. 
இதனால், நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, பச்சையப்பன் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com