காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை, பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை 4.50-க்கு தொடங்கிய மழை, தொடர்ந்து இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் வரை பெய்தது.
இதனால், நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, பச்சையப்பன் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.