சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய திருத்தங்களை கைவிடக் கோரி மதுராந்தகம் லாரி
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய திருத்தங்களை கைவிடக் கோரி மதுராந்தகம் லாரி உரிமையாளர்கள் சங்கம், மகாத்மா காந்தி மினி லாரி ஓட்டுநர் சங்கம் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்வோர் சங்கம், பஜார் சுமைப்பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பாக மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமை வகித்தார். லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் ஏ.ஜி. காந்தி முன்னிலை வகித்தார். 
இதில் சிஐடியு கௌரவத் தலைவர் வழக்குரைஞர் டி.கிருஷ்ணராஜ், மோட்டார் வாகன உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மதுசூதனன், சங்கங்களின் நிர்வாகிகள் கே.திலகராஜ், ஆர்.ரத்தினம், ஆர்.சோமசுந்தரம், எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com