கூடுவாஞ்சேரி அருகே வயதான தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி 20 சவரன் நகைகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி மதுரை மீனாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ்(76). இவர் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிய போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரிகின்றனர்.