ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
பாரதி நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேரூராட்சி பணியாளர்களுடன் இணைந்து, பாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா இப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ், செயலாளர் மணிவண்ணன், அமைப்புச் செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ராமசாமி, லாரன்ஸ், சீதா.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.