டிராக்டர் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை

மதுராந்தகத்தை அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தில் பனை மரத்தின் கள்ளைக் குடிக்கும்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் தங்களின் நண்பரான டிராக்டர் ஓட்டுநரை 3 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

மதுராந்தகத்தை அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தில் பனை மரத்தின் கள்ளைக் குடிக்கும்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் தங்களின் நண்பரான டிராக்டர் ஓட்டுநரை 3 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவர்களில் 2 பேரை செய்யூர் போலீசார் கைது செய்தனர்.
செய்யூர் வட்டம், நெசப்பாக்கம் பகுதியில் பனை மரங்களில் போதை தரும் கள் இறக்கி விற்கப்பட்டு வருகிறது. போலீஸாரின் மறைமுக ஆதரவுடன் கள் விற்கப்படுகிறது. இதனால் மற்ற பகுதிகளில் இருந்து கள் குடிக்க ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். 
இந்நிலையில் நெசப்பாக்கத்தை சேர்ந்த சீனுவாசனின் மகன் கிருஷ்ணகுமார் (28) வழக்கம் போல கள் குடிக்க வந்தார். அவர் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். 
அதே பகுதியை சேர்ந்த சரவணன், சிவா, ராஜேஷ் ஆகியோரும் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகுமாருக்கு நண்பர்கள். அனைவரும் கள் அருந்தினர். அப்போது அவர்களிடையே குடிபோதையில் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சரவணன், சிவா, ராஜேஷ் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகுமாரை கத்தியால் குத்தினர். இதில் அவர் இறந்துவிட்ட தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. ஆய்வாளர் அமல்ராஜ் தலைமையில் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். இக்கொலையில் தொடர்புடையசிவா, ராஜேஷ் ஆகிய இருவரைக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான சரவணன் தப்பி ஓடிவிட்டார். மதுராந்தகம் காவல்துறை டிஎஸ்பி ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இக்கொலை தொடர்பாக செய்யூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com