பெண் தீக்குளித்து சாவு

கூடுவாஞ்சேரியை அடுத்த ஓட்டேரி விரிவாக்கம் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். 

கூடுவாஞ்சேரியை அடுத்த ஓட்டேரி விரிவாக்கம் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். 
ஓட்டேரி விரிவாக்கம் பகுதியில் உள்ள வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவர மனைவி வெண்ணிலா(30). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினத்தன்று மீன்வாங்கி வந்து உணவு சமைக்கும்படி ரவிச்சந்திரன் கூறினார். இந்த விஷயத்தில் அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த வெண்ணிலா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தீயை அணைக்க முயன்ற ரவிச்சந்திரனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. 
இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெண்ணிலா அங்கு திங்கள்கிழமை இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com