திருப்புட்குழி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கருட சேவையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கருட சேவையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிப்ரவரி 12-ஆம் தேதி பிரம்மோற்சவம் விமரிசையாகத் தொடங்கியது. திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.  பவழக்கால் சப்பரம், சிம்மவாகனம்,  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை, ஹம்ஸ வாகனம்,  திருமஞ்சனம், சூரியபிரபை,  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை கருடசேவை மற்றும் பாலுசெட்டிசத்திரம் மண்டகப்படி திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு  ஹனுமந்த வாகனம் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. வியாழக்கிழமை (பிப்ரவரி 15)  அமாவாசையன்று  சேஷ வாகனம், திருமஞ்சனமும்,  பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com