சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக மேற்கொள்ளப்பட்ட ரத யாத்திரை குழு வியாழக்கிழமை செங்கல்பட்டு வந்தடைந்தது.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக நிவேதிதா ரத யாத்திரை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கியது. இந்நிலையில் செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் ரதத்தை வரவேற்று, சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு வந்தபோது, ஆசிரியர்கள், மாணவர்கள் நிவேதிதா ரதத்தை தரிசனம் செய்தனர்.