இரு வேறு விபத்துகளில் இருவர் சாவு

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
 திருப்போரூரை அடுத்த மடையத்தூர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்நதவர் சேகர் (53). கட்டடத் தொழிலாளியான இவர், சனிக்கிழமை வேலைக்குச் சென்று விட்டு, இரவு வீட்டுக்கு செல்ல பேருந்தில் மடையத்தூர் வந்து இறங்கினார்.
 பின்னர், சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த கார் மோதியதில், சேகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சேகர் இறந்தார். இதுகுறித்து திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 மற்றொரு விபத்து
 மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்ரீத் (19). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் நித்திஷ், நடராஜன். இவர்கள் சனிக்கிழமை இரவு மறைமலைநகர், பாவேந்தர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
 அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் அப்ரீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நித்திஷ், நடராஜன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அப்ரீத்தின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com