ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவர் உலகநாதன் கலந்து கொண்டு 230 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினார். இதில், ஊராட்சி செயலாளர் தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.