குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் கற்பகம் சுந்தர், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சுந்தர், வனக் குழுத் தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒரத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 22 பேருக்கு வழங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், 7 பேர் இலவச வீட்டுமனை பட்டா கோரியும், 13 பேர் முதியோர் உதவித் தொகை கோரியும் மனுகள் வழங்கினர்.
படப்பை வருவாய் ஆய்வாளர் அரி, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், டில்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.