காஞ்சிபுரம் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் விடியோ கலைஞர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் தங்கமோகன் தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை , விபத்து காப்பீடு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாநிலப் பொருளாளர் சிவகுமார் இணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டப் பொருளாளர் வாசு நன்றி கூறினார்.
இதில், காஞ்சிபுரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, தொழில்நுட்பக் கண்காட்சியும், புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றன.