வஜ்ராபுரம் கிராமத்தில் வயலோரம் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வஜ்ராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (65). அவர் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தமது மகன் வீட்டுக்கு வருவதற்காக வயல்வெளி ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், கற்பகத்தின் அருகில் வந்தார்.
அவரைக் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை அந்த நபர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக கற்பகம் அச்சிறுப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.