இருசக்கரவானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியதுக்கு உள்பட்ட சீம்பழம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (44), கட்டடத் தொழிலாளி. வேலை முடிந்து திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவருக்கு உதவி செய்யும் வகையில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த மேல்கதிர்பூர் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கீழம்பியைச் சேர்ந்த மோகனுக்கும், குமாருடன் வந்த பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.